.

Thursday, May 16, 2024

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கொடைக்கானலில் 20.05.2024 அன்று நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான AWARD FUNCTION அதாவது "BHARAT FIBER CHAMPIONS LEAGUE 2024 " நிகழ்ச்சிக்கு ஊழியர் தரப்பும் அழைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை 7.5.2024 அன்று நடைபெற்ற மாநில கவுன்சில் கூட்டத்தில் எழுப்பி இருந்தோம். பிறகு கோயமுத்தூரில் 10.05.2024 நடைபெற்ற சேவா மாநில மாநாட்டில் மாநில தலைமை பொது மேலாளர் அவர்களிடம் மீண்டும் நினைவு படுத்தினோம். அதன் அடிப்படையில் தற்போது கார்ப்பரேட் அலுவலகத்தில் அனுமதி பெற்று தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஊழியர் தரப்பு கோரிக்கைகளை ஏற்sறுக்கொண்டு உடனடியாக அனுமதி பெற்றுத் தந்த மாநில தலைமைக்கு நன்றி.

No comments:

Post a Comment