.

Friday, May 17, 2024


 விளையாட்டில் அரசியலை புகுத்தி விளையாடாதே 
 பகுதி 5 
 
பலமுறை திரும்பி திரும்பி சொன்னால் பொய்யான செய்திகள் என்றைக்கும்  உண்மை ஆகாது.

இது போன்ற விமர்சனங்களை கடந்து தான் 35 ஆண்டு காலமாக  தொழிற்சங்கப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

உங்களைப் போன்று அல்லது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்களை போன்று எந்த துணைப் பொது மேலாளர் அவர்களையும் இல்லத்தில் சந்தித்தது கிடையாது.
எங்களுக்கு ஆக்கர் சந்தும் தெரியாது, ஜோதி  நகரும் தெரியாது.
திண்டிவனமும் தெரியாது.

உங்களது தற்கொலை மிரட்டல் மெசேஜ் வெளியிட வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கருதுகின்றேன்.

உங்களுக்கும் இன்றைய துணைப் பொது மேலாளர் நிர்வாகத்திற்கும்  நல்லதொரு உறவு இருக்கட்டும்.

 நல்வாழ்த்துக்கள்

இந்த உறவின் அடிப்படையில் தானே நீங்கள் விதிக்கு மீறிய குடியிருப்பிற்கான  கட்டணம் செலுத்தாமல் அவசர அவசரமாக வீட்டை காலி செய்தீர்கள்.

நீங்கள் நன்றி கடன் செலுத்துவது காலத்தின் கடமையாகும். 
அவர் திருப்பி உங்களுக்கு நன்றி கடனாக ஆங்கிலம் மலையாளம் தமிழ் ஆகிய  மும் மொழியில்  புகழ்  பாடலாம்.

எங்களது இயக்கம் எந்த அதிகாரியை நம்பியும் செயல்படுவது கிடையாது. 

அதிகாரிகள் மேல் திட்டமிட்டு வீண்பழி சுமத்துவது அல்லது மிரட்டுவது யார் என்பது  நன்றாகவே தெரியும்?

உங்களது மிரட்டல் தான்  தற்கொலைக்குச் சென்றது என்பதை மறந்து விட வேண்டாம்.

தேர்தல் அதிகாரி மாற்ற வேண்டும் என்று கோரிக்கை  வைக்கப்பட்டது? 
ஏன் தோழா? மாற்றப்பட்டது.

 ஆனால் நாங்கள் கவலை கொள்ளவில்லையே!! காரணம் நாங்கள் தோழர்களை முழுமையாக நம்புகின்றோம். நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

அன்புக்குரிய உங்களது உறுப்பினர் கொரோனாவில் பதிக்கப்பட்டும்,கை குழந்தையோடு அல்லல் படுகின்ற பொழுது வேடிக்கை பார்த்தது யார்?
மிரட்டியது யார் யார்?   அவதூறுகளை கிளப்பி விட்டது யார் யார்?  மாற்றலை தடைபடுவதற்கு முயன்றது யார்?

எந்த விதமான தடைகளையும்  தகர்த்தெறிய தெம்பு பெற்றவர்கள் நாங்கள் என்பதை மறந்து விட வேண்டாம். உங்களைப் போன்று அல்லது உங்களது  சட்ட ஆலோசகர் போன்று தோற்ற பிறகு சங்கம் மாற கூடியவர்கள் இல்லை நாங்கள்.

பதவிக்காக சங்கம் மாறிய உங்களுக்கெல்லாம் நல்லதொரு சிந்தனை வரும் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

எந்தத் தொழிலும் செய்து பொருள் இட்டு வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

மாவட்டத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதாவது தொழிலில் ஈடுபட்டிருந்தால் நீங்கள் நிரூபிக்க தயாராக இருந்தால் நான் தொழிற்சங்கத்தை விட்டு விலக தயாராக இருக்கின்றேன் .

உங்களைப் போன்று எந்த  ஊழியரையும் பழிவாங்குவது எங்களுடைய தொழில் அல்ல..

சமூகத்தில் குரல் எழுப்ப முடியாத  தோழர்களுக்காக குரல் எழுப்புவது எங்களது கடமை.

எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டே இருப்போம். 

 மாவட்ட அலுவலகத்தில்  ஒலிபெருக்கியால்  NOISE வருவதாக சொல்லி கடிதம் கொடுக்கப்பட்டது .
உங்களது சங்கத் நண்பர்களும் அதற்கு ஆதரவு  அளித்தது தான்  உங்களது சங்கத்தின் தொழிற்சங்க வேலை என்பதை மறந்து விட முடியாது..

வலிக்கின்றவன்  தான் குரல் எழுப்புவான் .
சுகுசாக இருக்கின்றவன் மெய் மறந்து இருப்பான்.
 
எத்தனை தடைகள் வந்தாலும் உங்களையும் அரவணைத்து தான்  (ஒலி  பெருக்கியில்)குரல் எழுப்புவோம். 

யாருக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் தோழமையுடன் தோள் கொடுப்போம் .

தோழமைக்கு  என்றும் தலை வணங்குவோம்.

 VOICE for VOICELESS  PEOPLE .

தோழமையுடன் 

இரா ஸ்ரீதர் 
உறுப்பினர் கடலூர் பிஎஸ்என்எல் விளையாட்டு குழு.

No comments:

Post a Comment