.

Saturday, June 29, 2024

பணி ஓய்வு பாராட்டு விழா  29 6 24

கடலூர் மாவட்டத்தில் இன்று மூன்று ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். 

தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக பணி ஓய்வு விழா நடைபெறுகின்ற மாவட்டம் நமது மாவட்டம். அந்த சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று நமது பொது மேலாளர் அவர்கள் தலைமையில் காலை சரியாக பதினோரு மணிக்கு கடலூர் தொலைபேசி நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது மேலாளர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

நிர்வாகத்தின் சார்பில் பங்குபெற்ற அனைவரையும் ,உதவி பொது மேலாளர் S&M திருமதி S. சசிகலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

1. தோழர் E. கன்னியப்பன் TT செஞ்சி 
2. தோழர்  M.D.S.சுந்தர் சிங் டேவிட் ஜான்சன்  TT கடலூர் 
3. தோழர் T. கலியபெருமாள் . TT விருத்தாச்சலம்
 
தோழர் E கன்னியப்பன் அவர்கள் நேரடியாக குரூப் டி பதவியில் பணியில் சேர்ந்து இன்று டெலிகாம் மெக்கானிக்காக பணி ஓய்வு பெற்றார். தனது 35 ஆண்டு சேவை காலம் முழுவதும் திண்டிவனம்   மற்றும்  செஞ்சி பகுதியில்  மட்டுமே சிறப்பாக பணிபுரிந்து இன்று ஓய்வு பெறுகின்றார். 
தோழர் MDS சுந்தர் சிங் டேவிட் ஜான்சன் அவர்கள் மஸ்தூர் சேவை  உட்பட 35 ஆண்டுகால சேவையை கடலூர் பகுதியில் மட்டுமே சிறப்பாக செய்து இன்று பணி ஓய்வு பெற்றார். மிக அமைதியான நல்ல பண்பாளர். 

தோழர் T. கலியபெருமாள் தனது சேவை காலம் முழுவதும் விருதாச்சலம் பகுதியில் அனைத்து  பிரிவுகளிலும் பணி புரிந்துள்ளார். விருதாச்சலம் டெலிகிராஸ் பகுதி, வெளிப்புற பகுதி, சி எம் பகுதி, விற்பனை பகுதி, டிரான்ஸ்மிஷன் பகுதி மற்றும் நிறைவாக இன்ஃப்ரா பகுதியிலும் திறம்பட பணியாற்றுள்ளார். மஸ்தூர் காலம் முதல் இன்று வரை நமது தொழிற்சங்கத்தின் உறுதிமிக்க தோழனாக செயல்பட்டுள்ளார் அனைத்து தொழிற்சங்க இயக்கங்களையும்  முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
மூன்று தோழர்களும் விருப்ப ஓய்வுக்கு விருப்பம் கொடுக்காமல் உறுதியாக இருந்து வயது மூப்பின் அடிப்படையில்  இன்று ஓய்வு பெறுகின்றனர்.
மூவரும் தங்கள் குழந்தை செல்வங்களுக்கு மிக நல்ல முறையில் கல்வி செல்வத்தை கொடுத்துள்ளனர்.

மூவரும் மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதற்கு முக்கிய காரணமே அரசு பென்ஷன் பெறுவது தான்..அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் பங்கு பெற்று மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர்  தோழர் D.குழந்தைநாதன் பங்கு பெற்று மூன்று தோழர்களின் சிறப்பு  இயல்புகளை  மிக நல்ல முறையில் எடுத்துரைத்தார் .மூவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்வதில் மிகச் சிறந்து விளங்கினர். நமது நிறுவனம் கடுமையான சூழ்நிலையிலும் நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த விழாவில் பங்கு பெற்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் , பணி ஓய்வு பெறுகின்ற  தோழர்களின் பணி ஓய் காலம் நல்லபடியாக அமைய மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்தார். 

நிர்வாகத்தின் சார்பில்  துணைப் பொது மேலாளர் CM உயர்திரு ஜெயகிருஷ்ணன் மற்றும் நிதி ஆலோசகர் திருமதி பியுல நியூட்ராலிட்டி மிக சுருக்கமான வாழ்த்துரை வழங்கினார்கள். 

 பொது மேலாளர் அவர்கள் தனது தலைமை உரையில் கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் செயல்பாடுகள் பற்றியும், அடுத்த கட்ட வளர்ச்சி பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக மிக விரைவில் சிதம்பரம் ,திண்டிவனம் பகுதிக்கு 4 G சேவை மிக விரைவில் கிடைக்கும் என்று உறுதிப்பட கூறினார்.
FTTH speed பிரச்சினை தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் இன்னும் வெளிப்புற பிரச்சினைகள் இருக்கின்றன. அதை மிக விரைவில் நல்லதொரு மாற்றம் வருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்திற்கு புதிய தலைமை பொது மேலாளர் அவர்கள் பணியில் சேர்ந்துள்ளார்கள். கர்நாடகா மற்றும் அந்தமான் பகுதியில் பணிபுரிந்தவர். அவர் நிறைய எதிர்பார்க்கின்றார். அதற்கு ஏற்றவாறு நமது செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 

இன்று பணி ஓய்வு பெறுகின்ற மூன்று ஊழியர்களும்  மிகச் சிறப்பான பணியை செய்துள்ளார்கள் என்பதை  அவர்களது குறிப்புகள் நன்கு  உணர்த்துகின்றன. மூவரும் விருப்ப ஓய்வுக்கு செல்லாமல் பணி ஓய்வு பெறுவது என்பது மிகச் சிறந்தது.

மூவரும் தற்காலிக சேவையை கணக்கில் எடுத்துக் கொண்டால் 35 ஆண்டுகளுக்கு மேலாக நமது இலக்காவில் திறம்பட பணியாற்றுள்ளார்கள்..
தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்துள்ளார்கள்.சிறப்பான பணியை செய்வதற்கு மிகவும் உதவிட்ட அவரது குடும்பத்தாருக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மூவரின்  ஓய்வு காலம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

பணி ஓய்வு பெற்ற மூன்று  தோழர்களும் மிக சுருக்கமாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

JTO ஜென்ரல் அவர்கள் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ..

மாவட்ட நிர்வாகத்தால் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்.

No comments:

Post a Comment