.

Wednesday, December 16, 2015

தமிழ்மாநில ஃபோரம் கூட்டமைப்பு கூட்டம்

நேற்று 15-12-2015  சென்னையில் தலைமைப் பொது மேலாளரைச் சந்திக்கும் முன் அனைத்து சங்கத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. போரம் தலைவர் தோழர் P. சென்னகேசவன் தலைமை தாங்கினார்.
விவாதங்களுக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு.

1.     22-12-2௦15 மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம்
 ஓய்வுபெற்ற தோழர்களுக்கு 78.2%  DA இணைப்பு கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் உள்ளது. இந்த பாதகம் உடனடியாக களையப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி சக்திமிக்க ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 22-12-2௦15 செவ்வாய்க்கிழமை அன்று நடத்துவது.

2.     சந்தாதாரர் மகிழ்விப்பு 1௦௦ நாட்கள் திட்டம்.
BSNL சேவையை மேம்படுத்த கூட்டமைப்பு முன்மொழிந்த திட்டமாகும். இதனை ஜனவரி முதல் தேதியிலிருந்து சிறப்பாக நடைமுறைப்படுத்துவது. இது பற்றி மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அடிப்படையில் சேவை மேம்பாட்டு பணிகளில் அர்பணிப்புடன் உறுப்பினர்களை ஈடுபடுத்தி  உற்சாகப்படுத்துவது. BSNL-ல் வருவாய் பெருக்க நல்ல சேவையை உறுதிப்படுத்துவதில் முன்கையெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

3.     வெள்ள பாதிப்பு முன்பணம்
தலைமைப் பொது மேலாளரிடம் தரப்பட்ட கடிதத்தின் சாராம்சங்களை சந்திக்கும் போது வலியுறுத்துவது.
     இதன்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ள முன்பணம் ரூபாய் 25௦௦௦/- வழங்கிட டெல்லிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது . சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்.


======================================================================== 


மாநில தலைவர்களுடன் கருத்தாய்வு கூட்டம்

பிற்பகல் 3 மணிக்கு தலைமைப் பொதுமேலாளர் தலைமையில் நடைபெற்றது. NFTE சார்பில் தோழர் P.சென்னகேசவன் (மாநில  பொறுப்புச்செயலர்) சென்னை மாவட்டச் செயலர் தோழர் மனோஜ், நமது மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.
     பழைய முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. சேவையை மேம்படுத்த ஒவ்வொரு சங்கமும் முன் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு பொறுப்பேற்றன. அதன்படி AIBSNLEA பொறுப்பற்ற குடந்தைக் கோட்டம், SNEA பொறுப்பேற்ற தருமபுரி மாவட்டம் சிறப்பான இடத்தைப் பிடித்தன. இதனால் அந்தத் தோழர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். NFTE வேலூர் மாவட்டத்தையும் BSNLEU விருதுநகர் மாவட்டத்தையும் பொறுப்பேற்றது . அந்த மாவட்டங்கள் இன்னும் தங்கள் இலக்கை முழுமையாக எட்டவில்லை. அதற்கு இடையூறாக வந்த பிரச்சனைகள் பட்டியலிட்டு அவை களைய கூடுதல்  முயற்சிக்கு உறுதியளிக்கப்பட்டது.  வேலூரில் செல் சேவைக்கு நாம் பயன்படுத்தும் இயந்திரத்தின் டெக்னாலஜி மாற்ற வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் நகரில் டவர் பிரச்சனை சரிசெய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்டம் – CGM வருகை
    நமது மாவட்டச் செயலர் பேசும் போது வெள்ளம் பாதித்த கடலூர், சிதம்பரம் பகுதிகளைப் பார்வையிட தலைமைப் பொது மேலாளர் சமீபத்தில் வருகை தந்தமைக்கு நன்றி தெரிவித்தார். நெய்வேலி நகரிய பகுதி எல்லா கட்டமைப்புகளும் உடைய நகரமாய் இருந்தும் வெள்ளமும் மூன்று நாள் மின்சாரம் துண்டிப்பும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. CGM அந்த நகருக்கும் விஜயம் செய்திருக்க வேண்டும்  மேலும் அவரின் வருகையின் போது ஊழியர் சந்திப்பு நடந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதனைக் குறிப்பிட்டார்.

சேவை சீரமைப்பு .
     வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேவையை சீர்படுத்த பொருட்கள் தட்டுபாடு ஏதும் இல்லை. தேவைப்படும் பொருள் குறித்து மாவட்டங்களில்  மாநில நிர்வாகத்திற்கு எழுதலாம் என்பது தெரிவிக்கப்பட்டது.

வெள்ள முன்பணம்
     வெள்ள பாதிப்பு அட்வான்ஸ் ரூ25௦௦௦/- வலியுறுத்தப்பட்டது. இது குறித்து டெல்லியிலிருந்து சாதகமான முடிவை விரைவில் பெற ஆவண செய்திட உறுதி கூறப்பட்டது.
மழை வெள்ளத்தில் பணிக்கு வர முடியாத தோழர்களின் நிலைமை பரிவுடன் பரிசீலிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு நமது நன்றி.
சேலம் மாவட்டத்தை மேம்படுத்த NFTE சங்கமும்  BSNLEU சங்கமும் கூட்டாக பொறுப்பேற்றுக்கொண்டது.
    
     சென்னை ஃபோரம் கூட்டமும் ஒப்பனியன் லீடர் கூட்டமும் பயனுள்ளதாக அமைந்தது.

No comments:

Post a Comment