.

Thursday, December 17, 2015

தொடரும் நமது பணி........


சமீபத்தில்  கடலூரில் கடுமையாக  பெய்த  மழையினால் மழை நீர் செல்லமுடியாமல் சாக்கடை செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு அதனால் சாக்கடை கலந்த மழைநீர் சூழப்பட்ட கடலூர் GM அலுவலகப்பகுதி, வருவாய்பிரிவு, வாடிக்கையாளர் சேவைமையம் மற்றும் மெயின் தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் சிலநாட்களாக தேங்கி நின்ற சாக்கடையினால் அந்த பகுதிகளில் தொற்றுநோய் உருவாகும் அபாயம் இருந்தது. மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு நமது அலுவலகப்பகுதிகளில் தெளிப்பதற்கு பிளீச்சிங் பவுடர் தந்து உதவுமாறும், அதனை தாங்களே தெளித்து கொள்கிறோம் என வேண்டி கடிதம் எழுதி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் இன்று அதனை நம்மிடம் அளித்தனர். மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்று தோழர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் பணியை முழு அர்ப்பணிப்புடன் அதனை நமது அலுவலகப் பகுதிகளில் தெளித்தனர்.    அச்சமயம், அவ்வழியே காரில் சென்ற தனியார் விவசாய தொண்டு நிறுவன  ஆராய்ச்சி இயக்குனர் திருமதி ரேவதி அவர்கள் நமது பணியை கண்டு நெகிழ்ந்து காரில் இறங்கி வந்து நம்மை, நமது செயலைப் பாராட்டினார். மேலும் நம்மிடம் இந்த பகுதி வெள்ளத்தில் பாதிப்படைந்த விவாசாய நிலங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.










No comments:

Post a Comment