.

Thursday, October 4, 2018

முக்கிய செய்தி
ஒப்பந்த தொழிலாளருக்கான போனஸ் -2018

 தோழர்களே!..
இன்று ( 04-10-2018 )  நமது கடலூர் பொது மேலாளர் அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு   2018 ஆண்டிற்க்கான  போனஸ்  இம்மாதம் 20ஆம் தேதிக்குள்  கிடைத்திடும் என்று  நமது மாவட்ட சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.  மேலும் 2009 ஆம் ஆண்டு நிலுவை தொகையினை  ஒப்பந்த ஊழியர்களுக்கு  கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் இதர பிரச்சனைகள் குறித்த காலத்தில்  அமுல்படுத்திட  உறுதியளித்துள்ளனர்.

நமது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு      03-10-2018 அன்று ஊதிய பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஒப்பந்த ஊழியர்களின் நலனில் அக்கறையோடு செயல்பட்டு கொண்டிருக்கும் மாவட்ட சங்கங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி...

மற்றும் திண்டிவனம் தோழர் G.கணேசமூர்த்தி  அவர்களின் சென்னை மாற்றல் உத்தரவு விரைவில் வழங்கப்படும் என்று  நமது பொது மேலாளர்  உறுதியளித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி  கோட்ட  பிரசனையை பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு  சென்றோம் . நிர்வாகமும்  இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளது. 

பேச்சுவார்த்தையின் போது நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் D.குழந்தைநாதன், தோழர் A.S.குருபிரசாத், தோழர் R.பன்னிர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
                                                                                                                               தோழமையுடன்
                                                                   NFTE-TMTCLU

No comments:

Post a Comment