.

Friday, October 12, 2018


AO போட்டித் தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்றும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்குள் வெற்றி பெறாதவர்களின் விபரங்களை  வழங்கிடு..
மாநில நிர்வாகங்களுக்கு
கார்ப்பரேட் அலுவலகம் கடிதம்...
இளநிலை கணக்கதிக்காரி பதவிகளுக்கான 40% ( JAO 40% LDCE ) நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்ற போட்டித்தேர்வுகளில் பங்குபெற்றவர்களில் பல தோழர்கள் தேர்வில் தேர்ச்சிபெறத் தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்குள் அவர்கள் வெற்றி பெறாத காரணத்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அத்தோழர்கள் நமது நிறுவனத்தில் தேவைக்கும் அதிகமாக காலிப்பணியிடங்கள் இருப்பதால் தங்களையும் தேர்ச்சிபெற்றதாக கணக்கில் எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரினர். அத்தோழர்களின் கோரிக்கை இதுநாள் வரையிலும் நிர்வாகத்தால் கண்டுகொள்ளப் படாமலிருந்தது. அத்தோழர்கள் தங்களது தரப்பு நியாயத்தை பலவகையிலும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். நீதிமன்றத்திற்கும் சென்றனர்.

இந்நிலையில் கார்ப்பரேட் அலுவலகம் 2006 / 2009 / 2012 / 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் வருடவாரியாக அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் , தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் மற்றும் தகுதி மதிப்பெண் பெற்றும் காலிப்பணியிடம் இல்லாத காரணத்தினால் பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்கள் எத்த்னை பேர் ஆகிய விபரங்களை 19.10.2018க்கு முன்னதாக அளிக்குமாறு மாநில நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


No comments:

Post a Comment