.

Thursday, May 2, 2019

அண்ணாச்சி DR அவர்களின்
மூன்றாம் ஆண்டு நிணைவு நாள்


கடலூர் மாவட்ட NFTE சங்கத்தின் பலம்
ஆணி வேர், தோழர் சிரிலின் சீடன்,
எல்லோராலும் அண்ணாச்சி என்றும்
DR
என்றும்அன்புடன் அழைத்த

தொழிற்சங்க வழிகாட்டி
தோழர் கடலூர் D ரங்கநாதன்

பனி போர்த்திய இமையமென வெள்ளுடை தரித்த கருணைச் செங்குன்று!
கோட்டமில்லாத நேரிய கொள்கைச் சிங்கம்!

அவர் பார்த்துப் பார்த்து கட்டிய கடலூர் கோட்ட சங்கம் அதன் உறுப்பினர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் பெருக்கம்!

அண்ணாச்சி நேர் பார்த்து கட்டி அமைத்த தந்திதொலைபேசி கம்பிப் பாதைகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறிப் போயிருக்கலாம். ஆனால், அவர் கட்டி வளர்த்த கொள்கை வீரர்கள் உண்டுஅண்ணாச்சி போற்றிய
கொள்கையை மேல் எடுத்துச் செல்ல!

மறைந்த நம் தலைவருக்கு
செங்கொடி தாHழ்த்தி புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

அண்ணாருக்கு நமது தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..உடன் நமது மாவட்ட செயலர் மற்றும் நமது தோழர்கள்....





No comments:

Post a Comment