.

Friday, April 24, 2020

80சதம் ஒப்பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பு



   தோழர்களே நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை 80 சதம் குறைப்பதற்கு நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது .  இதன்  சம்மந்தமாக நிர்வாகத்தினை இன்று 24.04.2020 காலை 11.00 மணியளவில்  நமது NFTE  சார்பில்   

   மாவட்டச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்ட பொருளாளர் தோழர் A.S.குருபிரசாத், கிளைச் செயலர் தோழர் A.சகாயசெல்வன்  ஆகியோரும்  BSNLEU  சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம், மாவட்ட உதவிச் செயலர் தோழர் K.சிவசங்கர் ஆகியோர் சந்தித்தனர்.  நமது மாவட்ட செயலர் எக்காரணத்தை கொண்டும் ஆட்களை குறைக்க கூடாது எனவும். இது சம்மந்தமாக தற்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனவும்.  இந்த கோவிட்-19 சம்மந்தமாக எந்த ஒரு ஊழியரையும்  வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப கூடாது என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட  உத்திரவினையும் எடுத்து கொடுத்தோம்.

        நமது  கடிதத்தின் பேரில் நிர்வாகம் ஆட்குறைப்புனை  செய்யும் வேலைகளை தற்போது நிறுத்தி வைப்பதாக நமது சங்கத்திடம் கூறியுள்ளது.  
தோழமையுடன்

                                                D.குழந்தைநாதன்
மாவட்ட செயலர், 
கடலூர்.


 நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கடித நகல்:-




No comments:

Post a Comment