.

722400

Sunday, May 12, 2024

*விளையாட்டில் அரசியலை புகுத்தி விளையாடாதே 
பகுதி 1* 

தோழர் சௌந்தரராஜன் என்ற பெயரில் தோழர் கேடி  சம்பந்தத்தின் அறிக்கை வந்துள்ளது.

பரவாயில்லை தோழர் சம்பந்தத்தை அறிக்கை தயார் செய்வதற்காக சங்கம் பயன்படுத்துகின்றார்களே என்ற வகையில் பெருமை கொள்கின்றேன். வாழ்க்கையில் உண்மைக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பு இல்லை என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.

60 வயது என்பது அனைவருக்கும் ஓய்வு தான். ஆனால் இவர் ஓய்வு பெற்று ஓராண்டுக்கு பின்பும் வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும், உடல் நிலையின் தாக்கத்தின் காரணமாகவும் தோழர்களின் அரவணைப்பு இல்லாத காரணத்தின் காரணமாகும் சில வேண்டியவர்களுக்குl புரோக்கராக செயல்படுவது தவிர்க்க முடியாதது தான் .

அறிக்கை எழுதுவதற்கு முன்பாவது குறைந்தபட்சம் அவரது  வழிகாட்டி பாசமிகு தோழர் பால்கி அவரிடம் கேட்டு தெளிவு பெற்று இருக்கலாம்.

நீங்கள் யாரிடமும் தெளிவு பெறுகின்ற நிலையில் இல்லை என்பதை நான் உணர்கின்றேன்.

உங்களது  விமர்சனத்தை கண்டு என்றும் கவலைப்படுவதும் கிடையாது .பெரிதாக எடுத்துக் கொள்வதும் கிடையாது. 

ஆனால் உண்மைக்கு மாறான செய்திகளை மறுக்க வேண்டியது ஜனநாயகத்தின் கடமையாகும். 

பரந்து, விரிந்த ஜனநாயகத்தைப் பற்றி எழுதுகின்ற நீங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒருமுறை கடை பிடித்திருக்கின்றார்களா?
 
சமீபத்தில்  10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டம் மிகத் தெளிவாக உங்கள் ஜனநாயகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. 

இதைவிட அவமானகரமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. குறைந்தபட்சம் உங்களது  மாநில சங்கத்தை பார்த்தாவது திருந்த முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. மேலும் உங்களது உடல் நலத்திற்கும் அது மிகவும் நல்லது..

தனிமையில் இருக்கின்ற பொழுது உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள் .யார் தோழன் யார் நண்பன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
விளையாட்டு குழு வரலாற்றைப் பற்றி உங்களது ஆலோசகர் உயர்திரு R.V.ஜெயராமன்  அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். 

நீண்ட வரலாறு சொல்ல விரும்பவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேமநல குழு இல்லை என்பது யாரால்?
உங்கள் சங்கம் தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக  அங்கீகரிக்கப்பட்ட சங்கமாச்சே? 2004 முதல் 2013 வரை நீங்கள் மட்டும் தானே  அங்கீகரிப்பட்டு சங்கமாக செயல்பட்டு வந்தீர்கள். இருபது ஆண்டு காலம் ஜனநாயகத்தைப் பற்றி சிந்திக்கவில்லையா? 

ஜனநாயகம் என்றால் என்ன என்பது புரியவில்லையா? 

தற்போது  ஆலோசனை சொல்ல குட்டி அதிகாரிகள் இருப்பது போல் அன்று குட்டி அதிகாரிகள் இல்லையா? 10 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் மாவட்டத்தில் தல மட்ட குழு கூட்டத்தை தடை செய்தது தான் பரந்த ,விரிந்த ஜனநாயகமா?

பணி ஓய்வு பாராட்டு விழா வரலாறு தெரியுமா?

ஊழியர் தரப்பிற்கு அளிக்கப்பட்டிருந்த பெருமையை சீர்குலைத்தது யார்?

இன்று பணி ஓய்வு பெறும் தோழருக்கு மாலை போடுவது யார்?  வெட்கப்படுங்கள் தோழரே !!

No comments:

Post a Comment