.

Tuesday, May 14, 2024

விளையாட்டு கவுன்சிலில் அரசியலை புகுத்தாதே

பகுதி 3

தோழர்  A.சகாய செல்வன்
சென்னை தொலைபேசியில் இருந்து Junior Sports Assistant ரூல் 8 மாற்றலில் கடலூர் மாவட்டத்திற்கு  வந்தார் .
2004 க்கு முன்பு Sports Recruit  மூலம் பணியில் சேர்ந்தவர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் (SSLC )மூன்றாம் பிரிவில் பணியமர்த்தப்பட்டனர்.

 இன்று ஆட்சியாளர்களின் போல் போலி வாக்கு உறுதிகளை அள்ளி வீசி NFTE யை  அனைவரும் கூட்டணி அமைத்து தோற்கடித்தனர்.
அதன் உடனடியான விளைவு என்னவென்றால் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் தேர்வான அனைத்து ஊழியர்களும் ATT    கேடரில் பணி அமர்த்தபட்டனர் .

 தோழர் சகாயம் MBA (Regular) படித்திருந்தாலும் நான்காம் பிரிவில்தான் பணி அமர்த்தபட்டார்.
கடலூர் மாவட்டத்திற்கு வந்த பிறகுதான் அன்புக்குரிய தோழர் D.அன்பு தேவன் JTO அவர்களின் முயற்சியில் தோழர் சகாய செல்வன் உட்பட நான்கு தோழர்கள் TT தேர்வில் வெற்றி பெற்றார்கள்.

தொடர் முயற்சியில் தமிழகத்தில் முதல்  மதிப்பெண் பெற்று JE பதவிக்கு தேர்வாகி உள்ளார் . மிக விரைவில் JTO தேர்விலும் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் கிடையாது.

பி எஸ் எல் யூ சங்கம் தேர்தலில் வெற்றி பெற அனைத்து மோசடி வேலைகளையும் செய்யத் தெரிந்தது ஒழிய, ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த எந்த பிரச்சினையும் தீர்க்க வழி தெரியாமல் பிதுங்கிக் கிடக்கின்றது .

2007 க்கு பிறகு வந்த இளம் தோழர்களுக்கு தான்  60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஊதிய குழுவின் மூலமாக பெற்று வந்த ஊதியம் குறைக்கப்பட்டது என்பதில் வேண்டுமானால் BSNLEU சங்கம் பெருமை கொள்ளலாம்.

இந்தப் புரட்சியாளர்கள் நம்பி தான் சில  கிளர்ச்சியாளர்கள் அணி சேர்ந்திருக்கின்றார்கள்.

இவர்கள்  கடலூர் விளையாட்டு குழு தலைமையை பிடித்து ஒலிம்பிக் செல்வதற்காக திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

விழிப்புடன் இருப்போம் சதி வலையை தகர்த்தெறிவோம்.

No comments:

Post a Comment